Tuesday, March 29, 2011

இலங்கையின் கிரிக்கட் மைதானங்களிலிருந்து முரளிதரன் விடைபெற்றார்


இலங்கையின் கிரிக்கட் மைதானங்களிலிருந்து இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் இன்று விடைபெற்றுக் கொண்டார்.
உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியுடன் கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக முன்னதாகவே முரளிதரன் அறிவித்திருந்தார். அதன் காரணமாக இன்று அவர் விளையாடிய போட்டியே இலங்கை மண்ணில் அவர் விளையாடும் கடைசிப் போட்டியாகும்.
இன்றைய நியூசிலாந்துடனான போட்டியில் ஸ்டைரிஸின் விக்கட்டைக் கைப்பற்றியது அவர் இலங்கை மண்ணில் கடைசியாகக் கைப்பற்றியாக விக்கட்டாக பதிவாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மும்பையில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கட்டின் கடைசிப் போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கட் அரங்கிலிருந்தும் முரளிதரன் முழுமையாக ஓய்வுபெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment